சோழவந்தான் அருகே கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு

 

சோழவந்தான், ஜூலை 13: சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி செயலர் சுவாமி வேதானந்தா தலைமை வகித்தார். குலபதி அத்யாத்மனந்தா, கல்லூரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முனைவர் ஜெய்சங்கர் வரவேற்புரையாற்றினார். சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் கண்ணன், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் முனைவர்கள் அசோக்குமார், ரமேஷ்குமார், ரகு, ராஜ்குமார், தினகரன், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் ராஜேந்திரன் நன்றியுரையாற்றினார்.

 

The post சோழவந்தான் அருகே கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: