சென்னை: சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரையும் சென்னை மகிளா நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சிலர் தாக்கியுள்ளனர். அயனாவரத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 17 பேரையும் ஜூலை 31 வரை புழல் சிறையிலடைக்க நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.