செல்போன் திருடிய வாலிபர் கைது

தர்மபுரி, ஜூன் 26: தர்மபுரி மாவட்டம். அரூர் கெலப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (42). இவர் செல்போன் மற்றும் லேப்டாப் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கார்த்திக், கடையில் இருந்த ஒரு செல்போன் திருடு போனது. இதுகுறித்து கார்த்திக் அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதேபகுதியை சேர்ந்த வல்லரசு (28). என்பவர் செல்போனை திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

The post செல்போன் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: