புதுடெல்லி : கார்பரேட் காரர்களுக்காக மட்டும் தான் வேளாண் மசோதாக்கல் சட்டமாக்கப்பட்டுள்ளது, விவசாய மக்களைப் பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை என திமுக எம்பி திருச்சி சிவா நிருபர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தன்னுடைய இல்லத்தில் கையில் பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கு மரியாதை இல்லை. குறிப்பாக எந்த ஒரு முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தாலும் கலந்து பேசுவது கிடையாது.
கார்பரேட் காரர்களுக்கு தான் வேளாண் மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது :டெல்லியில் திருச்சி சிவா பேட்டி
