சென்னையில் 25ம் தேதி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கொடுக்கும் கடன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவி ஊக்கத்தொகை ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருவதை மறந்து விடாதீர்கள். சாதாரண கலப்பை முதல் டிராக்டர் வரை, விதை நெல் முதல் குளிர்பதன கிடங்கு வரை விவசாயிகளுக்கான உதவி திட்டங்கள் ஒன்றிய அரசில் குவிந்து கிடக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விவசாய பொருட்களுக்கு ஆதார விலை அறிவிக்கப்படவில்லை. எனவே, வருகிற 25ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post சென்னையில் 25ம் தேதி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: