சிவகாசியில் தேசிய டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப்: 6 மாநிலத்தில் இருந்து 72 வீரர்கள் பங்கேற்பு

 

சிவகாசி, ஜூன் 17: சிவகாசியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 25வது தென் மண்டல சீனியர் தேசிய டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. 6 மாநிலத்திலிருந்து 72 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். தமிழ்நாடு டென்னிகாய்ட் சங்கம், ஹட்சன் டென்னிகாய்ட் சங்கம் இணைந்து நடத்தும் தென் மண்டல சீனியர் தேசிய டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் 2023-2024ம் ஆண்டுக்கான போட்டி சிவகாசியில் நேற்று தொடங்கியது. போட்டியை ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் தலைவர் சந்திரமோகன், தொழில் அதிபர் இதயம் ராஜீவ் விக்னேஷ் துவக்கி வைத்தனர்.

தொடக்க நிகழ்வில் ஏராளமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உட்பட 6 மாநிலங்களில் இருந்து 72 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகள் குழுவாகவும் மற்றும் தனிநபர், இரட்டையர் போட்டியாகவும் நடைபெறுகின்றது. இறுதிப்போட்டி நாளை நடைபெறுகின்றது. தொடக்க விழாவில் ஹட்சன் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை ஆலோசகர் அஜித் ஹரிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிவகாசியில் தேசிய டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப்: 6 மாநிலத்தில் இருந்து 72 வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: