திருச்சி: திருச்சியில் சிட்பண்ட் நிறுவனத்தில் சீட்டு கட்டி பாதிக்கப்பட்ட மக்கள் காஜாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி வரகனேரி அம்பகார தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர், இவரது மனைவி ஆஷாபானு ஆகியோர் இணைந்து அப்துல்காதர் சிட்பண்ட் என்ற பெயரில் சீட்டு நடத்தி பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்றனர். ஆனால், அந்த தொகையை திருப்பி தராமல் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணாபுரம் வாழைக்காய் மண்டியை சேர்ந்த கன்னியம்மாள் என்பவர் காந்தி மார்க்கெட் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேல் விசாரணைக்காக இந்த வழக்கு, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதால் புகார் அளிக்காத முதலீட்டாளர்கள், மன்னார்புரம் காஜாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிட்பண்ட் நடத்தி மோசடி: பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளிக்கலாம் appeared first on Dinakaran.