×

சமரச விழிப்புணர்வு வாகன பிரசாரம்

தர்மபுரி, ஏப்.11: தர்மபுரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரசம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார். காணொலி மூலம் சமரச மையத்தில் வழக்குகள் சுமூகமாக தீர்வு காணப்படுவதால், நீதிமன்றத்தில் இருந்து திரும்ப பெறுவது, உங்கள் பிரச்னைகளை நீங்களே விரைவாக கையாண்டு கட்டணமின்றி தீர்வு காணப்படுவது உள்ளிட்டவை குறித்து பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சையத் பர்கத்துல்லா, முதன்மை சார்பு நீதிபதி கோகுலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி சிவகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தர்ராஜன், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபு, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி மதுவர்ஷினி, மூத்த வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், மணிவண்ணன், கல்லூரி பேராசிரியர்கள் அஸ்வின், அருள்ஜோதி, பாலு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post சமரச விழிப்புணர்வு வாகன பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Inauguration of the Reconciliation Awareness Campaign Vehicle ,Integrated Court Complex ,Reconciliation Awareness ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்