குன்னூர்: குன்னூரில் இயக்கப்படும் கூடுதல் மலை ரயில்களில் பயணிக்க இடம் கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் மலை ரயில்களில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். குன்னூர் ஊட்டி இடையிலான மலை ரயில்களில் 250 பேர் மற்றும் பயணம் செய்ய முடியும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பயண சீட்டுகள் கிடைக்காததால் ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.