திருவண்ணாமலை: போளூரில் சாராயத்தில் விஷம் கலந்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் குடித்து 13 பேர் 2000ம் ஆண்டில் போளூரில் இறந்தனர். 13 பேர் இறந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. காமாட்சி என்பவர் விற்ற சாராயத்தில் விஷம் கலந்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் விற்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக விஷம் கலந்ததாக வழக்கு தொடரப்பட்டது.