அரசியல் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடர்ந்து முன்னிலை: டிடிவி பின்னடைவு May 02, 2021 அமைச்சர் கடம்பூர் ராஜா கோவில்பட்டி டிடீவி கோவில்பட்டி அமாம்பாக்கம் பொது டி.டி.வி.தீனகரன் தின மலர் கோவில்பட்டி: கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விட 1,578 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும், அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூம், தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சீனிவாசனும் போட்டியிட்டனர். தொடர்ந்து வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.அதில் முதல் சுற்றின் முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ2,607 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். டி.டி.வி. தினகரனுக்கு 2,183 ஓட்டுகள் கிடைத்து இருந்தது. இதன் மூலம் டி.டி.வி. தினகரனை விட சுமார் 424 வாக்குகள் அதிகம் பெற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார். கம்யூனிஸ்டு வேட்பாளர் சீனிவாசனுக்கு 1,485 ஓட்டுகளும், நாம் தமிழர் வேட்பாளர் கோமதிக்கு 359 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கதிரவனுக்கு 92 வாக்குகளும் கிடைத்து இருந்தது. 2-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,888 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 3-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,513 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 5-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அந்த சுற்றின் முடிவில் 19 வாக்குகள் மட்டுமே அமைச்சர் கூடுதலாக பெற்றிருந்தார். 7-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,578 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். … The post கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடர்ந்து முன்னிலை: டிடிவி பின்னடைவு appeared first on Dinakaran.
28 ஆண்டுக்கு பின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கோவையில் சிறுகுறு தொழில்கள் மகத்தான வளர்ச்சியை காண போகிறது: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி
தன்னை ராஜா என அழைக்கும் அமித்ஷா ஒவ்வொரு கதவையும் தட்டி கையேந்தி நிற்கிறார் : காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
ஒடிசா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்..அடுத்த முதல்வராக தர்மேந்திர பிரதான் தேர்வு செய்யப்பட வாய்ப்பு!!
பிரதமர் மோடியின் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி நமது குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தியதாக அமையும் : அண்ணாமலை
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக சந்தித்த 9வது தேர்தல் தோல்வி: சோர்வடைந்த தொண்டர்கள்!!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலி :தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறும் விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள்!!