தமிழகம் கொரோனா பாதித்தவரை ஆக்சிஜன் முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்த வைகோ மகன்!: பொதுமக்கள் பாராட்டு..!! May 18, 2021 வைகோ விருதுநகர் மதிமுக பொது துரை வைகோ சத்திரபட்டி ராஜபாளையம், கொரோனா விருதுநகர்: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் விழிப்புணர்வு முகாமை பார்வையிட சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, கொரோனா நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் ரகுராமன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இலவசமாக அம்புலன்ஸ் சேவை, ஆக்சிஜன் சிலிண்டருடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமை பார்வையிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ மற்றும் எம்.எல்.ஏ. டாக்டர் ரகுராமன் சென்றனர். அப்போது அய்யனாபுரம் திமுக கிளை செயலாளர் அடைக்கலம் என்பவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக துரை வைகோ மற்றும் டாக்டர் ரகுராமன் எம்.எல்.ஏ. இருவரும் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவரை ஆம்புலன்சில் ஏற்றி ஆக்சிஜனுடன் முதலுதவி செய்து அந்த ஆம்புலன்ஸிலேயே கொண்டு போய் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொரோனா நோயாளியை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தது மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. … The post கொரோனா பாதித்தவரை ஆக்சிஜன் முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்த வைகோ மகன்!: பொதுமக்கள் பாராட்டு..!! appeared first on Dinakaran.
மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு
தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்
நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !
மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி : பொதுமக்கள் நலன் கருதி, அண்ணா சதுக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சுற்றுச்சூழல் மேம்பட பாதுகாப்பது அவசியம் அழிவின் விழிம்பில் 27% வனவிலங்குகள் : விழிப்புணர்வு நாளில் ஆய்வாளர்கள் தகவல்