உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நிகராக கல்வியின் தரத்தை உயர்த்த பிரதமர் மோடி விரும்புகிறார் :மத்திய கல்வித்துறை அமைச்சர்

புதுடெல்லி,: மத்திய கல்வித்துறை அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் உள்ள சில கல்வி நிலையங்கள் ஏற்கெனவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. பாதிப் படிப்பை இந்தியாவில் மேற்கொள்ளும் மாணவர்கள், பல்கலைக்கழக வளாகங்களில் படிப்பை முடிக்கின்றனர். உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நிகராக கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய பிரதமர் மோடி விரும்புகிறார்.

குறிப்பாக, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் (ஆக்ஸ்போர்டு உட்பட) கிளையை இந்தியாவில் தொடங்கவும் அவற்றை ஒழுங்குபடுத்தவும் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்யவேண்டியுள்ளது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிலையங்கள் உள்ளன. இந்திய உயர்கல்வி முறை உலகிலேயே மிகப்பெரியதாக உள்ளது. உலகில் 55 நாடுகளுடன் கல்வி தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: