கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் பிளம்ஸ் பூக்கள்

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிளம்ஸ் பழ மரங்களில் பூத்து குலுங்கும் வெள்ளை நிற மலர்கள் கண்போரை கவர்கின்றன.கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய முக்கிய பல வகைகளில் பிளம்ஸ்சும் ஒன்று.  இம்மரங்களில் காய்த்து பழுக்கும் கூடியதாகும். இம்மரங்கள் அட்டுவம்பட்டி, வில்பட்டி மற்றும் பள்ளங்கி பகுதிகளில் அதிக அளவில் உள்ளது. இந்த ஆண்டு கோடைகாலத்தில் பிளம்ஸ் விளைச்சல் துவங்க உள்ள நிலையில், அம்மரங்களில் வெண்மை நிற பூக்கள் பூத்துகுலுங்கத்துவங்கியுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகவும் அடர்த்தியாக பூக்கள் பூத்துள்ளது மகிழ்ச்சி அளித்தாலும், கோடை மழைக்காலத்தில் பூக்கள் உதிராமல் இருந்தால், பிளம்ஸ் விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பிளம்ஸ் பழங்கள் சந்தைக்கு சரிவர செல்லாமல் தேக்கம் அடைந்தது குறிப்பிடத்தக்கது….

The post கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் பிளம்ஸ் பூக்கள் appeared first on Dinakaran.

Related Stories: