கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது

 

கும்பகோணம், டிச.19: கும்பகோணம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கூகூர் பகுதியை சேர்ந்தவர் மருதையன் மகன் மணிகண்டன் (25). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியும் பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ம்தேதி, சிறுமியை தனியாக அழைத்து சென்ற மணிகண்டன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, சிறுமியின் தந்தை நாச்சியார்கோவில் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

The post கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: