குன்னூரில் அருகே அரசு பேருந்து சுவற்றில் மோதி விபத்து-20 பயணிகள் படுகாயம்

குன்னூர் : குன்னூர் அருகே அரசு பேருந்து சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். குன்னூர் அருகே உள்ள பால்மராலீஸ் பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குன்னூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை இளங்கோ என்பவர் ஓட்டினார். காட்டேரி பகுதி அருகே வந்த போது டிரைவருக்கு லேசாக தலைச்சுற்றல் ஏற்பட்டது.இதனால் டிரைவர், பேருந்தை இடது புறம் உள்ள சுற்றில் இடித்து நிறுத்தினார். இதில், பயணம் செய்த 60 பயணிகளில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் டிரைவரை மீட்டு குன்னூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் அறிந்து குன்னூர் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்து அறிந்த திமுக மாவட்ட செயலாளர் முபாரக் அரசு‌ மருத்துவமனைக்கு நேரில் சென்று படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். காயமடைந்தவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அனுப்பி வைக்கப்பட்டனர்….

The post குன்னூரில் அருகே அரசு பேருந்து சுவற்றில் மோதி விபத்து-20 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: