தேசிய தலைவர்களுடன் திருமாவளவன் சந்திப்பு

சென்னை: தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யும் வகையில், மத்திய அரசு  அவசர சட்டம் இயற்ற வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9வது அட்டவணையில் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  தொண்டு நிறுவனங்கள் மற்றும் தலித் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் டெல்லி பாராளுமன்ற சாலையில் நேற்று நடந்தது.

இதில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அவருடன் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் உள்ளிட்டோரும்  பங்கேற்றனர்.முன்னதாக, திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.

Related Stories: