கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஏப்.11: சிவகங்கையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைப் பதிவாளர் மாதாந்திர ஊதிய பட்டியலில் கையொப்பம் இடாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலாளர் கிங்ஸ்டன் டேவிட் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் துவக்க உரை ஆற்றினார். கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் வினோத்ராஜா கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். நிர்வாகிகள் மூவேந்தன், முத்தையா, சின்னப்பன் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். பொருளாளர் பொன்னையா நன்றி கூறினார்.

The post கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: