கணவன் மாயம்: மனைவி புகார்

பண்ருட்டி, ஜூலை 9: பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி(61). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இதுநாள் வரை வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது மனைவி அஞ்சலை, புதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கணவன் மாயம்: மனைவி புகார் appeared first on Dinakaran.

Related Stories: