பேரையூர்: டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு துப்புரவு பணியாளருக்கு வரித்தண்டலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் துப்புரவுபணியாளராக இருந்தவர் மூர்த்தி மகன் சுந்தரம் (40). இவருக்கு மதுரை கலெக்டரின் உத்தரவிற்கு இணங்க கல்வித்தகுதி அடிப்படையில் 20 வருடங்களாக துப்பரவு பணியாளராக இருந்தவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் துப்பரவு பணியாளர் வரித்தண்டலராக பதவி உதவி உயர்வு பெறுவதும் இதுவே முதல்முறையாகும்.