இ.கம்யூனிஸ்ட் பேரவை கூட்டம்

திருச்செங்கோடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர பேரவை கூட்டம், நேற்று நடந்தது. நகர செயலாளர் சுகுமார் தலைமை வகித்தார். நகர துணை செயலாளர்கள் கார்த்திக், தண்டபாணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அன்புமணி, கட்சியின் மாநில குழு முடிவுகள் குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் பேசினார். திருச்செங்கோடு நகர பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், நிறுத்தப்பட்ட டவுன் பஸ், மினி பஸ்களை இயக்க வேண்டும், குடிநீர் பைப்களை சீரமைக்க வேண்டும். ஜீவா நகர் பகுதியில் ஆண்கள் கழிப்பிட வசதி, தார் சாலை வசதி, 8-வது வார்டில் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜெயராமன், ராமகிருஷ்ணன், ஏஐடியுசி தனசேகரன், சுப்பிரமணி, செல்வராஜ், முருகேசன், சாமிநாதன், முரளிகிருஷ்ணன், கோபிராஜ், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இ.கம்யூனிஸ்ட் பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: