ஆப்பிள் ஐபோன் 14 சென்னையில் உற்பத்தி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நியூயார்க்: ஐபோன் 14 உற்பத்தி விரைவில் சென்னையில் தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 மாடல்களை அறிமுகப்படுத்தியது. இந்த வகை மாடல் ஐபோன் உற்பத்தி விரைவில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தொடங்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், `இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தியை தொடங்க வெகு ஆவலாக இருக்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது. ஐபோன் 14 மாடலுக்கான உதிரிபாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் உற்பத்தி செய்வது குறித்து பாக்ஸ்கான் டெக்னாலஜி நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது….

The post ஆப்பிள் ஐபோன் 14 சென்னையில் உற்பத்தி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: