அப்துர் ரஹ்மான் பள்ளியில் 173 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

நெல்லை, ஆக. 4: பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மு.ந.அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளியில் 173 பேருக்கு இலவச ைசக்கிள்களை அப்துல்வஹாப் எம்எல்ஏ வழங்கினார். தமிழ்நாடு அரசு சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மு.ந.அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளியில் 173 மாணவர்களுக்கு இலவச ைசக்கிள்களை அப்துல்வஹாப் எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பள்ளித் தாளாளர் எம்.கே.எம்.முகம்மது நாசர், முஸ்லிம் அனாதை நிலைய நிர்வாக கமிட்டி தலைவர் எம்.கே.எம்.செய்யது அஹமது கபீர், செயலாளர் எம்.கே.எம்.முஹம்மது ஷாபி, பொருளாளர் ஆரிப் சுல்தான், பள்ளித் தலைமை ஆசிரியர் முகம்மது முத்து மீரான், உதவி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது, செயற்குழு உறுப்பினர் நியமத்துல்லா, இனை செயலாளர்கள் முகைதீன், உஸ்மான் அலி, பேராசிரியர் செய்யது அப்பாஸ், கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணன், மாநகர பிரதிநிதி பாலன் என்ற ராஜா, மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு பாண்டியன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ், பொறியாளர் அணி சாய் பாபா, விவசாய அணி கால்வாய் துரை பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post அப்துர் ரஹ்மான் பள்ளியில் 173 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Related Stories: