நாகப்பட்டினம்: பயிர்க்கடன் விவகாரத்தில் நீதி கேட்டு வேதாரண்யத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதாரண்யத்தில் மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
