கோவை: கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரையும் சிறையில் அடைக்க ஆணை விடுக்கப்பட்டுள்ளது . 3 நாள் போலீஸ் காவல் முடிந்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் கார்த்தி, மோகன்ராஜை ஆஜர்படுத்தியது போலீஸ். சூலூர் சிறுமி வழக்கில் கார்த்தி, மோகன்ராஜை வரும் 12ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
