கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளேன்: கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார்

பெங்களூரு: காவிரி விவகாரத்தில் தொலைபேசி மூலம் முதல்வர் விஜய் என்னிடம் பேசினார். கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார். மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் விஜய் விளக்கமளிப்பதற்காக வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகல் குழுவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

Related Stories: