சென்னை: சென்னையில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் 97வது கிராண்ட்மாஸ்டராக ஹர்ஷவர்தன் வெற்றி பெற்றார். சென்னையில் சோழா செஸ் சர்வதேச ஜிஎம் மற்றும் ஐஎம் நார்ம்’ சதுரங்கப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. வளரும் இந்திய சதுரங்க வீரர்களுக்கு சர்வதேச பட்டங்களை வெல்வதற்கான உலகத்தரம் வாய்ந்த தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐஎம் ஹர்ஷவர்தன் ஜி பி, தனது இறுதி ஜிஎம் நார்ம் தகுதியைப் பெற்று, இந்தியாவின் 97வது கிராண்ட்மாஸ்டர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். மற்றொரு இளம் வீரரான எப்எம் தக்ஷின் அருண் தனது இரண்டாவது ஐஎம் நார்ம் தகுதியை உறுதி செய்து சாதனை படைத்துள்ளார். போட்டியின் நிறைவில் நடந்த பிரமாண்ட விழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன. இப்போட்டி இந்திய சதுரங்க வரலாற்றில் இளம் வீரர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என சோழா அறக்கட்டளை பெருமிதம் தெரிவித்துள்ளது.
