மதுரை: காவலர்களுக்கு 8 மணி நேர வேலை, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி விசாரணையை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. காவல்துறையில் அதிக பணிச்சுமை, ஓய்வின்றி பணியாற்ற வேண்டியுள்ளதாக சத்யபிரியா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
