கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 21 இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடு

துபாய்: ஓமன் வளைகுடாவில் கடந்த 10ம் தேதி பலாவு நாட்டு கொடியுடன் சென்ற எம்டி செட்டில் பெல்லோ என்ற டேங்கர் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்தபோது டேங்கர் கப்பல் ஓமன் கடற்கரை அருகே இருந்தது. அதில் இருந்த 24 பேரில் 3 மாலுமிகள் உயிரிழந்த நிலையில் 21 இந்தியப் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் மீட்கப்பட்ட இந்திய குழுவினர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டது. இந்நிலையில் இந்திய குழுவை ஓமனுக்கான இந்திய தூதர் பிரசாந்த் பிசே நேற்று சந்தித்துப்பேசினார்.

Related Stories: