சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள விவசாய பயிர் கடனை, முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள், ஜி ராம் ஜி திட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
