×

வரலாற்றில் இல்லாத அளவு புதிய உச்சத்தை எட்டிய சென்னையின் மின்தேவை..!

சென்னை: சென்னை நகரத்தின் மின்நுகர்வு வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. சென்னை நகரில் நேற்று 5,008 மெகாவாட் மின்தேவை பதிவாகி இருக்கிறது.

இதனால் நாளில் தலைநகர் டெல்லி நகருக்கு அடுத்து அதிக மின்தேவை உள்ள பெருநகரமாக சென்னை மாறி இருக்கிறது. கடும் கோடை வெயில் காரணமாக ஏசி, ஏர்கூலர் மற்றும் ஃபேன் பயன்பாடு மிகவும் அதிகரித்து காணப்படுவதால் சென்னை நகரின் மின்தேவை 5,008 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியின் உச்சகட்ட மின் நுகர்வு 8,656 மெகாவாட்-ஆக பதிவாகி இருக்கிறது.

சென்னை நகரை பொறுத்த வரை முந்தைய சாதனையான 4,809 மெகாவாட்டை (மே 21, 2026 அன்று பதிவானது) முறியடித்து இந்த புதிய 5,008 மெகாவாட் அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவுக்கு மின் தேவை அதிகரித்துள்ள போதிலும், நகரின் சில முக்கிய இடங்களில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதாக மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து உள்ளனர். சில இடங்களில் 5 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு நீடிப்பதால் மக்கள் நள்ளிரவில் முக்கிய சாலைகளுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிகழ்வு சமீப நாட்களாக வாடிக்கையாகி விட்டது.

Tags : CHENNAI ,MINDEH ,Delhi ,
× RELATED ராஜபாளையம் வழியாக பிற வழித்தட ரயில்கள் தற்காலிகமாக இயக்கம்