திருச்சி: மணப்பாறை அருகே வீரப்பூர் பூசாரிப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். பூசாரிப்பட்டியில் பொன்னர் சங்கர் கோயிலுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவில்லை என மக்கள் புகார். டாஸ்மாக்கை அகற்ற பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
