வேன் மோதி வாலிபர் காயம்

திருப்புத்தூர், ஜூன் 4: திருப்புத்தூர் சௌமிய நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மலைச்செல்வம் மகன் பிரபாகரன் (28). இவர், நேற்று முன்தினம் இரவு திருப்புத்தூரில் டூவீலரில் இருந்து சிவகங்கைச் சாலையில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சிவகங்கைச் சாலையில் இருந்து திருப்புத்தூர் நோக்கி வந்த மீன் சரக்கு வாகனம் டூவீலர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருப்புத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

 

Related Stories: