சென்னையில் மேற்கூரை சரிந்து வடமாநில தொழிலாளர் உயிரிழப்பு

சென்னை: ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக தற்காலிக குடியிருப்பு அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு போடப்பட்ட இரும்பு ஷெட்கள் உள்ள பகுதியில் விபத்து ஏற்பட்டது.

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தபோது மேற்கூரை திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 35 வடமாநில தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஜார்கண்டை சேர்ந்த தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: