இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம் தயக்கமின்றி பதிவு செய்யுங்க.. மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இதன் நோக்கமே, அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது தான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.

இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், நிர்வாகிகள், அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31ம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.

மாநிலப் பொறுப்பாளர்களும், மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வாட்ஸ் அப் குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: