மதுரை,மே 26: மதுரை, தல்லாகுளம் போலீஸ் எஸ்ஐ அப்துல் காதர் தலைமையில் போலீசார் தபால்தந்தி நகர் கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் இருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடினார். அவரை போலீசார் விரட்டிச்சென்று மடக்கிப்பிடிதனர். சோதனையில் அவரிடம் வாள் இருப்பது தெரியவந்தது.
அதனைபறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில், உச்சப்பரம்பு மேடு அம்பேத்கர் காலனியை சேர்ந்த வடிவேல் மகன் சஞ்சய் சந்தோஷ்(20) என்பது தெரியவந்தது. மேலும் வழிப்பறி செய்தவற்காக வாளுடன் பதுங்கி இருந்ததாக கூறினார். இதுகுறித்து வழக்கு பதிவு ெசய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.
