நாகப்பட்டினம், மே 26: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்தது. வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 700 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
