பழநி: ஆளுநர் மாளிகையில் மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் எதிரொலிக்கும் என்று பழநியில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.ேக.சேகர்பாபு இன்று காலை பழநி வந்தார். மலைக்கோயிலுக்கு சென்ற சுவாமி தரிசனம் செய்த அவர், கிரி வீதியில் உள்ள அழகுநாச்சியம்மன் கோயில், துர்க்கையம்மன், வன துர்க்கையம்மன், மகிஷாசுர வர்த்தினி அம்மன் கோயில், திருஆவினன்குடி கோயிலிலும் தரிசனம் செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘ஆளுநர் மாளிகையில் மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் எதிரொலிக்கும். எஸ்ஐஆருக்கு பிறகு தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீத உயர்வு குறித்து கடந்த 2021 தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் தெரியவரும்’’ என்றார்.
