×

கூடலூர் வழியாக பெங்களூர் சென்ற காரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1.71 லட்சம் பறிமுதல்

கூடலூர், ஏப்.19: கூடலூர் கள்ளிக்கோட்டை சாலை கோழிப்பாலம் பகுதியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் நசீர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது நிலம்பூர் பகுதியில் இருந்து கூடலூர் வழியாக பெங்களூர் செல்வதற்காக வந்த கார் ஒன்றை சோதனையிட்டனர்.

அப்போது காரில் வந்த அஸ்கரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது.  இதனைத்தொடர்ந்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் காண்பித்து பணத்தைக் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கூடலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Tags : Flying squad ,Election Flying Squad ,Bangalore ,Gudalur ,Election ,Squad ,Nazir ,Kozhipalam ,Kallikottai Road ,Nilambur ,
× RELATED முதுமலையில் கோடை மழையால் பசுமை சாலையோர புல்வெளிகளில் புள்ளி மான் கூட்டம்