லாகூர்: கடந்தாண்டு மே மாதம் இந்தியாவுடனான நான்கு நாள் மோதல் குறித்து கருத்து தெரிவித்ததற்காகத் தொடரப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி நொரீன் நியாசிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் பாதுகாப்பு ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவுடனான மோதல் நடந்த போது பாகிஸ்தானின் ராணுவ படைகளை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
