சென்னை: சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்குக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமை கருவேலம் மரங்களை அகற்றும் பணிகளை ஒருங்கிணைக்க நோடல் அதிகாரியாக வருவாய்த் துறை செயலரை நியமித்து ஐகோர்ட் ஆணையிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 90% கருவேலம் மரங்கள் அகற்றம், வட மாவட்டங்களில் சுணக்கம் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது.
