டெல்லி : டெல்லியில் 21ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஜந்தர்மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை கண்டித்தும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கவும் வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினருடன் இணைந்து போராடி வந்தார். வரும் திங்களன்று நாடாளுமன்றம் கூடும் நிலையில் முற்றுகைப் போராட்டத்தை சோனம் வாங்சுக் அறிவித்திருந்தார்.
