அரியலூர், ஜூலை 18: அரியலூர் மாவட்டம், செந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் நேற்று மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.36,500 பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் கவிதா தலைமையிலான காவல் துறையினர், நேற்று மாலை செந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்து அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்தனர். 36,500 ரூபாய் கணக்கில் காட்டப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்த காவல் துறையினர், வட்டாட்சியர் மற்றும் அலுவலகப் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
