தேனூர் கிராமத்தில் எரியாத உயர் கோபுர மின் விளக்கு சீரமைக்கப்படுமா?

பாடாலூர், ஜூலை 18: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் தேனூர் – டி.களத்தூர் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி நடந்து செல்லும் வகையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உயர் கோபுர மின் விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படவும், திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்கவும் அதிக வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே விபத்து மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊரக வளர்ச்சி துறைக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: