கீவ்: ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக உக்ரைன் கடந்த நான்கரை ஆண்டுகளாக கடுமையான போர் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சராக மிகைலோ ஃபெடரோவ்(35) பதவி ஏற்றார்.
இந்த சூழலில் மிகைலோ பெடரோவ்வை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நீக்கி உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் மிகைலோ ஃபெடரோவ் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் கீவ், லிவ், டினிப்ரோ உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
