×

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட 22 வயது இளைஞர் உயிரிழப்பு

 

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட 22 வயது இளைஞர் உயிரிழந்தார். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கல்மந்தை காலனியைச் சேர்ந்த இளைஞர் ராஜமாணிக்கம். 22 வயது இளைஞரான இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் உயிரிழந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ராஜமாணிக்கம் சடலமாக கிடந்தார். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருகில் இருந்த போதை ஊசியை பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் போதை ஊசி செலுத்தி கொண்ட போது தான் ராஜமாணிக்கம் உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து காந்தி மார்க்கெட் போலீசார் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திருச்சியில் போதை ஊசி செலுத்தி இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Trichy Gandhi Market ,Trichy ,Young Rajamanickam ,Kalmandai Colony ,Trichhi Gandhi Market ,
× RELATED துறைமுகம் முதல் பூஞ்சேரி வரையிலான 6...