இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நிர்வாக காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், அதற்கு ஈடாக வரும் 26ம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் இரண்டு வெள்ளி மற்றும் கடைசி இரண்டு ஞயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்படும். அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படுவதால் ரேஷன் கடைகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக ரேஷன் கடைகள் இன்று செயல்படும் appeared first on Dinakaran.