×

அதிமுக நிர்வாகிகள் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்?.டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சாவூர்: அதிமுக நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை? என அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நேற்று அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என அண்ணாமலை தான் கூற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்தாண்டு இறுதியில் எங்களது நிலைப்பாடு பற்றி அறிவிப்போம். இந்த தமிழ் புத்தாண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதாக அமையும். திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்துவது குறித்து ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்றுமுன்தினம் இரவு கும்பகோணத்தில் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில், ‘மாநில கட்சிகள் செல்வாக்கான மாநிலங்களில், தேசிய கட்சிகளால் காலூன்ற இயலவில்லை. எனவே, மாநில கட்சிகளை வலுவிழக்க செய்யும் முயற்சிகளில் தேசியகட்சிகள் ஈடுபட்டுள்ளன. அந்தந்த பகுதி மக்களின் தேவைகளுக்காக போராடுவது மாநில கட்சிகள் தான். தமிழ்நாட்டை பொறுத்தவரை காவிரி பிரச்னையில் தேசிய கட்சிகள் கர்நாடகாவில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக நழுவிச்சென்றன. மாநிலக்கட்சிகள் தான் போராடின. காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னையை மாநில கட்சிகளால் தான் தீர்க்க முடியும். எந்தக்காலத்திலும் தமிழகத்தில் தேசியக்கட்சிகள் காலூன்ற முடியாது. தேசியக்கட்சிகளால் மாநிலக்கட்சிகளை அழித்துவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக நிர்வாகிகள் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்?.டிடிவி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,DTV ,Dhinakaran ,Thanjavur ,Dinakaran ,
× RELATED எடப்பாடி குறித்து சர்ச்சை கருத்து...