இந்த காரணத்திற்காக தான் வாகனம் ஓட்டும்போது தூங்குபவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள ஓட்டுனர்கள் விரும்புவதில்லை.ஒரு குறுநாடகத்தில், கதாநாயகன் தான் தொழில் செய்யும் இடத்தில் இருந்து வெகுதூரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடியேறுவார்.அந்த வீட்டின் சொந்தக்காரர், தொழில் செய்யும் இடத்தின் அருகில் வசிக்காமல் ஏன் இவ்வளவு தூரத்தில் வந்து தங்குகிறீர்கள். உங்களுக்குத் தேவையில்லாத பண விரயம் மற்றும் உடல் அலைச்சல் ஏற்படுமே என்று கேட்டார்.அதற்கு அந்த கதாநாயகன் இந்த இடத்திலதான் பெரும் பணக்காரர்கள் வசிக்கிறார்கள். நானும் அவர்களைப் போலவே பெரும் பணம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இங்கு இருந்தால் தான் தினமும் அவர்களைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.நான் சும்மா இருக்க நினைத்தாலும், அவர்களை பார்க்கும்போது அவர்களை போன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், மீண்டும் உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுவேன். அதனால்தான் பணத்தையும், உடல் அலைச்சலையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த குடியிருப்பில் குடியேற விரும்புகிறேன் என்று பாமரத்தனமாகச் சொல்வார். எவ்வளவு பெரிய உண்மை அது!நம் வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ எதிர்மறை எண்ணம் கொண்ட சிலரைப் பிடித்தோ பிடிக்காமலேயோ சந்திக்க நேரிடும். அவர்களிடம் கவனமாக இருங்கள். உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் கொஞ்சம் சுறுசுறுப்பு கூட அவர்களால் கெட்டுவிடும்.
(தொடரும்)
The post உன் பக்கத்தில் இருப்பது யார் appeared first on Dinakaran.
