இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவமழை குறைந்த போதிலும், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 11வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க வனத்துறை விதித்த தடை தொடர்கிறது. இந்நிலையில், தீபாவளி விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று வந்த சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
The post அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: கும்பக்கரையில் குளிக்க 11வது நாளாக தடை appeared first on Dinakaran.